ராமர் பாலம்: இடிக்க தடை கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமர் பாலத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ராமகோபாலன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது
சேது சமுத்திர திட்ட பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் ராமர் பாலத்தை இடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பாலத்தை ராமர் கட்டி, பயன்படுத்தியதாக நம்பப்பட்டு வருகிறது. இதை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த எங்களிடம் வேறு வழியுள்ளது. இந்த திட்டத்தை அரசிடம் தர தயாராக இருக்கிறோம்.
இதனால் ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ராம. கோபாலன்.
இந்த மனு வருகிற 15ம் தேதி பரிசீலனைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications