சென்னை பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பெங்களூரில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு:காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி (26), பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் தன் தங்கை இந்திராவுடன் பிரேசர் டவுனில் குடியிருந்தார்.
சென்னையில் இருந்தபோது ரவி என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை காதலித்து வந்தார் விஜயலட்சுமி. இவருக்காக ரவியும் பெங்களூரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இந்தக் காதலுக்கு விஜயலட்சுமியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் விஜயலட்சுமி வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து பெங்களூர் பிரேசர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications