For Daily Alerts
Just In
இலங்கை தமிழர் பகுதியில் குண்டுவீச்சு
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் மீது ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
புலிகள், ராணுவம் மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டகளப்பு பகுதியில் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த முகாம்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் 4 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அதேபோல முல்லை தீவிலும் ஒட்டி காட்டான் பகுதியில் வீடுகள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தின. 2 கிபீர் ரக விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த தாக்குதல் 2 முறை நடந்தது.
இந்தத் தாக்குதலால் ஏராளமானோர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்.
Comments
ராணுவம் தமிழர்கள் இலங்கை குண்டு வீச்சு flight women attack refugees house வீடுகள் injury பகுதி அகதிகள் முகாம் demolish srilanka news தரைமட்டம்
Story first published: Sunday, May 13, 2007, 5:30 [IST]