இலங்கை தமிழர் பகுதியில் குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் மீது ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
புலிகள், ராணுவம் மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டகளப்பு பகுதியில் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த முகாம்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் 4 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அதேபோல முல்லை தீவிலும் ஒட்டி காட்டான் பகுதியில் வீடுகள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தின. 2 கிபீர் ரக விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த தாக்குதல் 2 முறை நடந்தது.
இந்தத் தாக்குதலால் ஏராளமானோர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications