ஐஏஎஸ் தேர்வு-தமிழகத்திலிருந்து 30 பேர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐ.ஆர்.எஸ். அதிகாரி பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரும் மீண்டும் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகியுள்ளார்.

2006ம் ஆண்டுக்கான 495 பணியிடங்களுக்கான முதல் நிலை சிவில் சர்வீஸ் தேர்வில் 1112 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில் 150 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 4 வரை மெயின் தேர்வு நடந்தது.

இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம் 474 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முட்டியால் ராஜ் ரேவு என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்திலிருந்து 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

30 பேரிலும் நந்தகுமார் என்பவர் முதலாவதாக வந்துள்ளார். இவர் தேசிய அளவில் 30வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.ஆர்.எஸ் ஆக தேர்வு பெற்றவர். அந்தப் பயிற்சியில் தற்போது ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தேர்வு எழுதி இப்போது ஐஏஎஸ் ஆகி விட்டார்.

நந்தகுமார் உள்பட 12 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் விவரம்

நந்தகுமார், அறிவழகன், டாக்டர் பாரதிதாசன், கூட்டுறவு துணைப் பதிவாளர் பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ராஜலிங்கம், ஐபிஎஸ் அதிகாரி சுதாகர், தேவசேனா, ஏஞ்சலீன், ஹேமலதா, நோபல், கபீலா, சேவியர், ஜவகர், அனிதா, அருண் காந்த், சுந்தர்ராஜன், திருஞானசம்பந்தம், செந்தில் ஆவுடை கிருஷ்ணராஜ், பெரியசாமி, சரவணன், திகார் சிறை டிஎஸ்பி முருகன், டாக்டர் ஜஸ்டீன், டாக்டர் முத்துக்குமாரசாமி, டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+