பிசிசிஐக்கு போட்டி லீக்!- தலைவர் கபில்
மும்பை:இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போட்டியாக ஜீ டிவி நிறுவனம் தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பின் தலைவராக முன்னாள் கேப்டன் கபில்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடமும், இலங்கையுடமும் மிக மோசமாக விளையாடி தோல்வியுற்று வெளியேறியது.
இதைத் தொடர்ந்து புதிய, இளம் இந்திய வீரர்களை அடையாளம் காண பிசிசிஐக்குப் போட்டியாக கிரிக்கெட் லீக் அமைப்பைத் தொடங்கப் போவதாக அறிவித்தார் ஜீ டிவி நிறுவன லீக் போட்டியை நடத்தி திறமையான வீரர்களை உருவாக்குவோம் என்றும் அறிவித்தது.
நாடெங்கும் லீக் போட்டிகளை நடத்தி புதிய வீரர்களை உருவாக்கவுள்ளது இந்த அமைப்பின்.
இதன் செயற்குழுவின் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரைத் தவிர முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டோனி கிரேக், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கபில்தேவ் கூறுகையில்,
இந்திய கிரிக்கெட் லீக்கின் தலைவராக நியமிகப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அனுபத்தை பயன்படுத்தி இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்குவேன் என்றார்.