மொராக்கோ மகளிர் ஓபன் டென்னிஸ்:சானியாவுக்கு நம்பர் 1 அந்தஸ்து
பெஸ் (மொராக்கோ)மொராக்கோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நம்பர் 1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளில் முதல் நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சானியாவுக்கு கிடைத்துள்ளது.இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா கடந்த மார்ச் மாதம் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய போது வலது முழுங்காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகி கடந்த இரண்டு மாதங்களாக ஒய்வு எடுத்து வந்த சானியா பங்கேற்கும் முதல் போட்டி மொராக்கோ ஓபன் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று தகுதி சுற்று தொடங்கியது. இதில் தேர்வு பெறும் வீராங்கனையுடன் சானியா முதல் சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளார்.
இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வானியா கிங் உடன் ஜோடி சேர்ந்துள்ள சானியா முதல் சுற்றில் ரஷ்யாவின் குட்ரியாவ்ட்சேவா, உக்ரைனின் ஓல்கா சாவ்சுக் ஜோடியுடன் மோதுகிறார்.
ஆனால் உலக தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா 49வது இடத்தில் இருந்து 51வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.