திருச்சி ஆயுத தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி:திருச்சியில் உள்ள மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலைக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்தததையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஆயுத தொழிற்சாலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலாளிக்கு போன் மூலம் தகவல் வந்தது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களோடு வந்த போலீஸார் தொழிற்சாலை முழுவதும் சோதனை செய்தனர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இங்கு ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட அதிக சக்தி மிகுந்த மல்டி கிரனைட் லாஞ்சர்கள், அன்டர் பேரல் கிரினாட் லாஞ்சர்கள் ஆகியவற்றை சோதனை செய்து பார்க்க இன்று பாதுகாப்புதுறையின் உயர்மட்ட குழு வந்திருந்தது.
இந்த சோதனையை தடுக்க சில விஷமிகள் வேண்டுமென்ற இந்த புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
4 வருடங்களுக்கு முன்பும் இதே போன்ற சோதனையின்போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது என ஆயுத தொழிற்சாலை செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.