For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை கொல்ல முயன்ற யாகவா மகன்,கள்ளக் காதலி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் யாகவர் முனிவர் மகன் சரண் கைது செய்யப்பட்டார்.

கிளி, யானை, பூனை, நாய், பூச்சி, நண்டு, நறி ஆகியவற்றோடு பேசும் திறமையுள்ளவர் என்று கூறித் திரிந்தவர் யாகவா முனிவர். இவரது மகனான சரணுக்கும்(32), ரேணுகா தேவிக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்கள் வீட்டின் மாடியில் சங்கீதா என பெண் தன் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருடன் சரண் பழக ஆரம்பித்தார். ரேணுகா தேவிக்கு இது தெரிய வந்து கண்டித்தார். ஆனாலும் சங்கீதாவை விடாத சரண், மனைவியை அடித்து சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

இந் நிலையில் ரேணுகா தேவியை அரிவாளால் வெட்ட முயன்றார் சரண்.

அவரிடமிருந்து தப்பிய ரேணுகாதேவி பள்ளிக்கரணை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சரணை போலீசார் கைது செய்தனர். சங்கீதாவும் கைது செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X