வாஜ்பாயை ஜனாதிபதியாக்க மம்தா யோசனை
டெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ஜனாதிபதியாக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி யோதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிகாலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைவதால் அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி தலைவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மம்தா பானர்ஜி கூறுகையில்,
அப்துல் கலாம் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மீண்டும் அவரையே ஜனாதிபதியாக்க வேண்டும். அவரை தேர்ந்தெடுக்க முடியாவிட்டால் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ஜனாதிபதி ஆக்கவேண்டும்.
வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கை யாராலும் குறை கூற முடியாத அளவுக்கு உள்ளது. அவரை பெயரை சிபாரிசு செய்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அவரது நண்பர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். வாஜ்பாய் மட்டுமே ஜனாதிபதி பதவிக்கு சிறந்தவர் என்றார்.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் பாஜக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், ஜார்ஜ் பெர்ணான்டஸ், மம்தா உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், இதில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிெவடுக்கும் அதிகாரம் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் சுஷில்குமார் ஷிண்டேவையும் கம்யூனிஸ்ட் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியையும் ஜனாதிபதியாக முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் வாஜ்பாயை ஜனாதிபதியாக்க பாஜகவும் முயல்கிறது. மம்தாவின் யோசனையை அத்வானியும் ஆதரிப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து வாஜ்பாய் விலகும் நிலை உருவாகும், தனது பாதை க்ளியர் ஆகும் என அத்வானி நினைக்கிறார்.
ஆனால், போட்டியிட்டால் வெற்றி உறுதியில்லாத நிலையில் அந்த விஷப் பரிட்சைக்கு வாஜ்பாய் தயாராக இல்லை என்று தெரிகிறது.
புதிய ஜனாதிபதி நியமிப்பதில் பாஜகவிற்கும் அதிக எம்எல்ஏக்களை வைத்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் முக்கிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 9 மாநிலங்களில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. அதனால் இவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். ஆனால், அது மட்டுமே வெற்றிக்கு உதவாது. தனது கூட்டணி தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவும் தேவைப்படும்.
மாயாவதியைப் பொறுத்தவரை சோனியாவுடன் அவருக்கு நட்புறவு உள்ளது. இதனால் சோனியா சொல்லும் வேட்பாளரை மாயாவதி ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications