ராதிகா செல்வி பதவியேற்பு: புரோட்டோகாலை மீறிய தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:மத்திய அமைச்சராக ராதிகா செல்வி பதவியேற்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது புரோட்டோகாலை (விதி) மீறிய செயல் என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் யாரேனும் பதவியேற்பதாக இருந்தால் அதுகுறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகைதான் வெளியிடும். ஆனால் புதிய மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராதிகா செல்வியின் பதவியேற்பு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

18ம் தேதி காலை 9.30 மணிக்கு ராதிகாசெல்வி பதவியேற்பார் என்றும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட வேண்டிய ஒரு அறிவிப்பை, அத்துமீறி தமிழக அரசு வெளியிட்டது தவறு, இதன் மூலம் புரோட்டோ காலை தமிழக அரசு மீறி விட்டது என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+