மத்திய அமைச்சராகிறார் ராதிகா செல்வி-சரத்குமாருக்கு கருணாநிதி செக்
சென்னை:சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.
மத்திய அமைச்சரைவயில் நேற்று முக்கிய மாற்றங்கள் நடந்தன. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பு ஏ.ராசாவுக்கு மாற்றப்பட்டது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொண்டார்.
உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி, வனத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டார்.
இதுதவிர புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கபப்ட்டுள்ளார். தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டுள்ளார். இணை அமைச்சராக அவர் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
![]() |
இவருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.
கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி, சென்னையில் போலீஸாரால் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிதான் ராதிகா செல்வி.
பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரை அப்படியே திமுக இழுத்துக் கொண்டு திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் நிறுத்தியது. ராதிகா வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் நாடார் சமுதாயத்தினரின் ஓட்டுக்களும் கணிசமாக திமுகவுக்குத் திரும்பியது.
ராதிகாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நாடார் சமூகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் நாடார் சமூகத்தினர் இடையே திமுக மீது அதிருப்தி நிலவி வந்தது.
இந்த அதிருப்தி அலையைப் பயன்படுத்தித்தான் சரத்குமார் புதிய கட்சி தொடங்குவதற்கான அடிப்படை வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்த நிலையில்தான் சரத்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பேன்: ராதிகா
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன் என மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டள்ள ராதிகா செல்வி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்தில்லை.
மத்திய அமைச்சர் பதிவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோன் என அவர் கூறினார்.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!













Click it and Unblock the Notifications