தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார்ராசா- மாறனின் திட்டங்கள் தொடரும்
டெல்லி:மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஏ.ராசா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தயாநிதி மாறனின் ராஜினாமாவைத் தொடர்ந்து இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராசா. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கிராமப்புற தொலைத் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். வசதியில்லாதோர், பொருளாதாரரீதியில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகள் கிடைக்கச் செய்ய முயல்வேன்.
![]() |
மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறையின் சேவைகள் அடிமட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்.
இந்தத் துறையில் பிற நாடுகளின் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
மாறன் தொடங்கி வைத்த எல்லா திட்டங்களும் அதே வேகத்துடன் தொடரப்படும். அது 3ஜி மொபைல் தொழில்நுட்பமாகட்டும், ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டமாகட்டும் எதுவாக இருந்தாலும் எல்லா திட்டங்களும் தொடரும்.
ரோமிங் கட்டண ரத்து குறித்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றார் ராசா.













Click it and Unblock the Notifications