For Quick Alerts
For Daily Alerts
Just In
திருப்பதி: 3 நாளில் ரூ. 3.1 கோடி காணிக்கை
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்களில் மட்டும் ரூ. 3.10 கோடி உண்டியலில் காணிக்கை கிடைத்துள்ளது.
கோடை விடுமுறை காரணமாக கோயில்களிலும், சுற்றுலாத் தளங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் முக்கிய கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகின்றனர்.
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க சுமார் 40 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானின் அருள் பெற்று செல்கின்றனர்.
கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் மட்டும் ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானமாக மட்டும் ரூ. 3.10 கோடி கிடைத்துள்ளது. இந்த மாதத்தில் ஏழுமலையானின் கோயில் உண்டியலில் வருமானம் சுமார் ரூ. 30 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
temple திருப்பதி thatstamil income national summer holiday indian politics headlines india news online உண்டியல் காணிக்கை updates
Story first published: Wednesday, May 16, 2007, 5:30 [IST]