ராஜ்யசபா தேர்தல்: சட்டசபை செயலரைதேர்தல் அதிகாரியாக நியமிக்க ஜெ. எதிர்ப்பு
சென்னை:தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தமிழக சட்டசபை செயலாளர் செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் சதி மற்றும் தீய நோக்கங்களை அரங்கேற்றும் வைகயில் சட்டசபை செயலாளர் செல்வராஜை, தேர்தல் அதிகாரியாக நியமிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
ஓரிரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள செல்வராஜை பயன்படுத்தி அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை சீர்குலைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
எனவே திமுக அரசு பரிந்துரைக்கும் செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்கக் கூடாது. நேர்மையான அதிகாரியைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications