மாலத்தீவு அருகே குண்டுகளுடன் வந்த படகுமூழ்கடிப்பு: 5 பேர் கைது-விடுதலைப் புலிகளா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:விடுதலைப் புலிகளின் படகை மாலத்தீவு கடலோரப் பாதுகாப்புப் படையினர் சுட்டு மூழ்கடித்தனர். இருப்பினும் அதில் வந்த ஒரு நபர் மலையாளத்தில் பேசியதால் அவர்கள் உண்மையில் விடுதலைப் புலிகள்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அகமது ஷகீது கூறுகையில்,

மாலத்தீவு கடல் எல்லைக்குள் வந்த அன்னிய படகை எங்கள் கடற்படை சுட்டு மூழ்கடித்தது. அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், படகில் இருந்த ஐந்து பேரில் ஒருவர் தானாக முன்வந்து மாலத்தீவு படையினரிடம் சரணைடந்தார்.

அவர் கூறுகையில், மற்ற நான்கு பேரும் தனது படகை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி ஏறியாதகவும் துப்பாக்கிகள், குண்டுகளை அவர்கள் வைத்திருந்தனர் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அந்த நபர் மலையாளத்தில் ேபசுவதால் மாலத்தீவு அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். எனவே பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 1988ம் ஆண்டு இலங்கையைச் ேசர்ந்த ஒரு போராளி அமைப்பு மாலத்தீவில் புரட்சியில் ஈடுபட்டது.

ஆனால் இந்திய விமானப் படையும் கடற்படையும் அங்கு விரைந்து போராளி அமைப்பைச் சேர்ந்தவர்களை மாலத்தீவை விட்டு வெளிேயற்றியது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+