கமுதி: அனுமதியின்றி தேவர் சிலை வைப்பு-அகற்ற போலீஸ் முயற்சி- பெரும் பதற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அனுமதி பெறாமல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை போலீஸார் அகற்ற முயன்றதால் சிலை வைத்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கமுதி அருகே உள்ள கழுத்தறுவான் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அவர்கள் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை.
அனுமதி வாங்காமலேயே கிராமத்தினர் சிலை வைக்கும் பீடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த வருவாய்த் துறையினர் சிலை அமைக்க ஏற்பாடு செய்த பார்வார்டு பிளாக் வல்லரசு (போட்டி அணி) மாநில பொதுச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ராஜபாண்டியனையும், கிராம மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதிகாரிகள் முடிவினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து ராஜபாண்டியன் உள்பட 45 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கழுத்தறுவான் கிராமத்தினர் நேற்று முன் தினம் இரவோடு இரவாக தேவர் சிலையை அங்கு நிறுவி விட்டனர். இதையறிந்த கமுதி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். அனுமிதியின்றி சிலை வைத்ததாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் தேவர் சிலையையும் அவர்கள் அகற்ற முயன்றனர். இதற்கு அப் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடனும், அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் இறக்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந் நிலையில் கழுத்தறுவான் கிரமாத்தையடுத்துள்ள இடிவிலிகி, எருமைகுளம் ஆகிய கிராமங்களிலும் தேவர் சிலையை வைக்க அப் பகுதியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அங்கு வன்முறை மூளும் அபாயம் நிலவுவதால் ஆயுதம் ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications