ஜனாதிபதி பதவி: பிரணாப் முகர்ஜிக்கு கம்யூ. ஆதரவு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தினால், அதற்கு இடது சாரிக் கட்சிகள் ஆதரவு தரும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரையே மீண்டும் குடியரசு தலைவராக தேர்வு செய்ய சில கட்சிகள் முயன்றன. ஆனால் கலாம் பதவியில் நீடிக்க விரும்பவில்லை.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.
![]() |
பாஜக தரப்பில் குடியரசுத் துணைத் தலைவர் பைரான்சிங் ஷெகாவத்தை நிறுத்த விரும்புகின்றனர். ஆனால் பாஜக வேட்பாளருக்கு சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அதிமுக, அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலை உள்ளது.
இருப்பினும் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
அதேசமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கிட்டத்தட்ட வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டு விட்டது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர்கள் வேட்பாளராக்க தீர்மானித்துள்ளனர்.
முன்னதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை வேட்பாளராக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்கவில்லை. மாறாக, மேங்கு வங்கத்தைச் சேர்ந்தவரான பிரணாப் முகர்ஜியை பரிந்துரைத்தது.
இவரும் வங்காளிதான் என்பதால் பிரணாப்பை ஆதரிக்க இடதுசாரித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். டெல்லியில் நேற்று இடதுசாரித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏபி.பர்தான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டால் அவரை இடதுசாரிகள் எதிர்க்காது என்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரகாஷ் கரத் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜியைத் தவிர கரண்சிங், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும் பிரணாப்புக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
மறுபக்கம் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை எதிர்க்க 3வது அணிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன. உ.பியில் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதியின் ஆதரவு யாருக்கு என்பதும் இன்னும் தெரியவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக இருந்தாலும் சரி, மாநிலக் கட்சிகளின் கையில்தான் வெற்றிக்கனி உள்ளது என்பதால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை மாநிலக் கட்சிகள்தான் நிர்ணயிக்கப் போகின்றன.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!













Click it and Unblock the Notifications