விஜயகாந்த் மண்டபம் இடிப்பு பணி ஆரம்பம்-மிச்ச இடத்தில் புதிய கட்சி அலுவலகம்
சென்னைதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. மிச்ச சொச்சமாக கிடைக்கும் 3 கிரவுண்டு நிலத்தில் புதிய கட்சி அலுவலகத்தைக் கட்ட விஜயகாந்த் தீர்மானித்துள்ளார்.
விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் கோயம்பேடு நூறடி சாலையில், 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இருந்தது. இந்த இடத்தை பாலம் கட்டத் தேவைப்படுவதாக கூறிய மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கைப்பற்றினர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டு மண்டபத்தை மீட்க முயன்றும் முடியாமல் போனதால் கல்யாண மண்டபத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டார் விஜயகாந்த்.
இதையடுத்து மண்டபத்தில் இடிபடும் பகுதியை நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறியிட்டனர். நெடுஞ்சாலைத் துறை மேலாளர் ராவ், நில ஆர்ஜித தாசில்தார் சிதம்பரம் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தன.
மொத்தம் உள்ள 1 ஏக்கர் நிலத்தில் 56 சென்ட் வரை மட்டுமே இடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதம் உள்ள 3 கிரவுண்ட் நிலம் விஜயகாந்த்துக்கேக் கிடைக்கும்.
நேற்று இடிப்புப் பணி ஆரம்பமாகியது. இதையடுத்து தேமுதிகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திரளாக கூடியிருந்து கோஷமிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
பின்னர் சுதீஷ் கூறுகையில், மிச்சம் கிடைக்கும் இடத்தில் தேமுதிகவுக்கு அலுவலகம் கட்டப்படும். விரைவில் இதே இடத்தில் கட்சியின் தலைமைக் கழக அலுவலகம் செயல்படத் தொடங்கும் என்றார்.
-
காவல் நிலைய மரணங்களில்.. இதுபோன்று நடப்பது அரிது! நீதிபதி சொன்ன பாயிண்ட்! கடும் தண்டனை இதுக்குதான்! -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம் -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications