உசிலம்பட்டி: குழந்தையைக் கொன்று வீட்டின்முன் புதைத்த தந்தை, பாட்டி கைது
மதுரை:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை பிறந்த உடனேயே கள்ளிப் பால் கொடுத்து கொன்று, உடலை வீட்டுக்கு முன்பாக புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாத குழந்தையின் தந்தை மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
பெண் சிசுக் கொலைக்கு பெயர் போனது உசிலம்பட்டி. இந்த அவப் பெயர் சமீப காலமாக மாறி வந்தது. அரசின் தீவிர நடவடிக்கை, தன்னார்வ நிறுவனங்களின் தொடர் விழிப்புணர்வுப் பிரசாரம், காவல்துறையின் கண்காணிப்பு காரணமாக பெண் சிசுக்களைக் கொலை செய்வது குறையத் தொடங்கியது.
இருப்பினும் ஆங்காங்கே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் பிறந்த உடனேயே பெண் சிசுவைக் கொன்று உடலை வீட்டுக்கு முன்பே புதைத்த கொடூரம் நடந்துள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பூமிகா, மோனிகா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பமான செல்விக்கு 3வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
3வதும் பெண்ணாக பிறந்ததால் அதிருப்தியுற்ற வடிவேல் தனது தாயார் ஒச்சம்மாளுடன் சேர்ந்து குழந்தையைக் கொல்ல முடிவு செய்தார். அதன்படி குழந்தைக்கு கள்ளிப்பாலை கொடுத்து கொலை செய்தனர். பின்னர் தங்களது வீட்டுக்கு முன்பு பள்ளம் தோண்டி அதில் சிசுவைப் போட்டு மூடி விட்டனர்.
தகவல் கிடைக்கப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறுதியில், வடிவேல், ஒச்சம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications