தொழிலதிபருக்கு ஷாக்: மின்வாரிய ஊழியர் கைது
சென்னை:தன்னைப் பற்றி லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர், முதியவரான தொழிலதிபரை மின்சார ஷாக் கொடுத்துக் கொல்ல முயன்று கைதாகியுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாதமுனி (75). தொழிலதிபரான இவர் பூங்காநகர் பகுதியில் பிரமாண்ட வணிக வளாகம் கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு பெற தனது வீடு ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்து வரும் மின்வாரிய ஊழியர் ராம் மோகனை அணுகினார்.
மின் இணைப்பை விரைவில் பெற்றுத் தருவதாக கூறிய ராம் மோகன் இதற்காக நாதமுனியிடமிருந்து ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி இணைப்பு வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் கோபமடைந்த நாதமுனி, மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராம் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நாதமுனியின் செயலால் ஆத்திரமடைந்த ராம்மோகன் நேற்று நாதமுனியின் வீட்டுக்கு வந்தார். அப்போது நாதமுனி மட்டும் தனியாக இருந்தார். அவரை ஒரு சேரில் உட்கார வைத்து கை, காலை கட்டி விட்டு பின்னர் அவரது உடம்பில் மின்சார வயரைப் பொருத்தி ஷாக் கொடுத்துள்ளார்.
கதறித் துடித்த நாதமுனியிடம், என் மீதான புகாரை வாபஸ் வாங்கி விடு, இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நாதமுனி மயங்கி விடவே, பயந்துபோன ராம் மோகன் அங்கிருந்து ஓடி விட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நாதமுனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்மோகன் கைது செய்யப்பட்டார்.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்











Click it and Unblock the Notifications