தினகரன் மீதான தாக்குதல்-சிபிஐ விசாரணை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை தினகரன், சன் டிவி அலுவலகம் மீதான தாக்குதல் குறித்த சிபிஐ விசாரணை இன்று தொடங்கியது.

தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான திமுகவினர் மதுரை தினகரன், சன் டிவி அலுவலகம் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர்.

இந்த தாக்குதலில் பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் திரிபாதி, மத்திய உள்துறைக்கு கடிதமும் எழுதினார். இதையடுத்து இன்று 11 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு மதுரைக்கு வந்தது.

மதுரை சரக டிஐஜி, புறநகர் எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் இந்தக் குழு விசாரணை நடத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+