இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
அபுதாபி:இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 5 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றதுள்ளது.
இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கு இடையே 3 ஒரு நாள் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல்போட்டி நேற்று அபுதாபியில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சளரான மகரூப் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய சமர சில்வா 47 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது.
236 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.
பின்னர் அப்ரிடி, கமரன் அக்மல் இணை அதிரடியாக விளையாடியது மேலும் விக்கெட் விழாமல் ரன்களை குவித்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 239 ரன்கள் குவித்தது.
அப்ரிடி அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 73 ரன்ளும், கமரன் 51 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தனர்.
அபாரமாக விளையாடிய அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
பாகிஸ்தான் அணி உலககோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்கு பின் வெற்றி பெறும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.