தொடர்ந்து செஞ்சுரி - கலக்கும் வெயில்!
சென்னை:சென்னை, வேலூர் உள்ளிட்ட பல ஊர்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. சில இடங்களில் மழை பெய்துள்ள போதிலும், பெரும்பாலான ஊர்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னை, வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் வெயில் மிகக் கடுமையாக உள்ளது. இந்த ஊர்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் அடித்து வருகிறது.
கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டத்தை சாலைகளில் காண முடியவில்லை. ஊரே வெறிச்சோடியதைப் போல காணப்படுகிறது. மாலை நேரங்களில் சென்னை கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடும் வெயில் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும், அணல் காற்றும் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதால் மக்கள் மண்டை காய்ந்து போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications