போலி விசாவில் பாரீஸ் செல்ல முயன்ற11 இளைஞர்கள் சென்னையில் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:போலி விசாக்கள் மூலம் பாரீஸ் செல்ல முயன்ற 11 கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில், துபாய் செல்வதற்காக எமிரேட் விமானம் தயார் நிலையில் இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது 11 பேர் கும்பலாக அங்கு வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர்கள் தாங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், படப்பிடிப்புக்காக துபாய் வழியாக பாரீஸ் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தன.

இதனால் சந்தேகம் வலுத்த அதிகாரிகளின் அவர்களின் விசாக்களை சோதனை செய்தனர். அதில் அனைத்து விசாக்களும் போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜெகதீசன், முருகன், காசிராஜன், ராஜேஷ்கண்ணா, சுப்ராம், செல்லப்பன், மணிமாறன், கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, வினாயகம், சங்கர் ஆகிய 11 பேரும் தேனி, விருதுநகர், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்தவர்கள். படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இவர்களை மதுரையைச் சேர்ந்த ஆழ்வார் என்பவர் அணுகியுள்ளார்.

பாரீஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி இவர்களிடம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை பணத்தைப் பெற்றுள் சென்னைக்கு வந்துள்ளார். போலி விசாக்களை ஏற்பாடு செய்து இவர்களை விமான நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்.

விமான நிலையத்தில் யாராவது விசாரித்தால் ஷூட்டிங்குக்கு போகிறோம் என்று கூறுமாறு இவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படிச் சொல்லித்தான் 11 பேரும் சிக்கிக் கொண்டு விட்டனர்.

இந்த வழக்கு தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆழ்வாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+