போலி விசாவில் பாரீஸ் செல்ல முயன்ற11 இளைஞர்கள் சென்னையில் கைது
சென்னை:போலி விசாக்கள் மூலம் பாரீஸ் செல்ல முயன்ற 11 கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில், துபாய் செல்வதற்காக எமிரேட் விமானம் தயார் நிலையில் இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது 11 பேர் கும்பலாக அங்கு வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர்கள் தாங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், படப்பிடிப்புக்காக துபாய் வழியாக பாரீஸ் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தன.
இதனால் சந்தேகம் வலுத்த அதிகாரிகளின் அவர்களின் விசாக்களை சோதனை செய்தனர். அதில் அனைத்து விசாக்களும் போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜெகதீசன், முருகன், காசிராஜன், ராஜேஷ்கண்ணா, சுப்ராம், செல்லப்பன், மணிமாறன், கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, வினாயகம், சங்கர் ஆகிய 11 பேரும் தேனி, விருதுநகர், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்தவர்கள். படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இவர்களை மதுரையைச் சேர்ந்த ஆழ்வார் என்பவர் அணுகியுள்ளார்.
பாரீஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி இவர்களிடம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை பணத்தைப் பெற்றுள் சென்னைக்கு வந்துள்ளார். போலி விசாக்களை ஏற்பாடு செய்து இவர்களை விமான நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்.
விமான நிலையத்தில் யாராவது விசாரித்தால் ஷூட்டிங்குக்கு போகிறோம் என்று கூறுமாறு இவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படிச் சொல்லித்தான் 11 பேரும் சிக்கிக் கொண்டு விட்டனர்.
இந்த வழக்கு தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆழ்வாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications