லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில்கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர்.
சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார்.
![]() |
அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது.
இதனால் கார் நிலைதடுமாறி பேருந்தின் அடியில் போய் சிக்கிக் கொண்டது. மேலும் மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித்துக் கொண்டது.
குபுகுபுவென புகையுடன் காரில் ஏற்பட்ட தீ பேருந்திலும் பற்றிக் கொண்டது. இதைப் பார்த்த பேருந்தின் டிரைவர் பேருந்தில் இருந்த பயணிகளை வேகமாக கீழிறக்கினார். சிறிது நேரத்தில் பேருந்தும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் சிக்கிக் கொண்ட கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த 7 பேரும் தப்பி வர முடியாமல் பரிதாபமாக காருக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிர்மல்ராஜ், அன்பரசு உள்ளிட்டோர்தான் காரில் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் சுற்றுலாவாக காரில் கிளம்பியுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தால், பேருந்தும், காரும் முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?













Click it and Unblock the Notifications