பண்ணையார் சாவுக்கு சிபிஐ விசாரணை நடந்தே தீரும் - ராதிகா செல்வி
நெல்லை: எனது கணவர் வெங்கடேச பண்ணையார் சாவு குறித்து கண்டிப்பாக சிபிஐ விசாரணை நடந்தே தீரும். அதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று பண்ணையாரின் மனைவியும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான ராதிகா செல்வி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சராக பெற்றுப்பேற்றுள்ள ராதிகா செல்வி முதல் முறையாக நேற்று நெல்லை வந்தார். அங்கு மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
![]() |
எனது கணவர் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது தொடர்பாக நான் சிபிஐ விசாரணை கோரியுள்ளேன். அது கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்.
எனக்கு வழங்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். எனது அமைச்சர் பதவியால் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்துவேன்.
நடிகர் சரத்குமாரை நான் போட்டியாக கருதவில்லை. அவர் ஒரு பெரிய ஆளாக எனக்கு தெரியவில்லை.
தென் மாவட்டங்களில் திமுகவின் வளர்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசிப்பேன் என்றார் ராதிகா செல்வி.













Click it and Unblock the Notifications