கடலில் இறங்கி பூரி சங்கராச்சாரியார் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமர் பாலத்தை இடிப்பதைக் கண்டித்து பூரி சங்கராச்சாரியார் தனுஷ்கோடி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
![]() |
சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என பல்வேறு இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் பூரி சங்கராச்சாரியார் மிஜிலானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் வந்தார். 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் நடந்த ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டார்.
நேற்று தனுஷ்கோடி சென்ற அவர் அங்கு ராமர் பாலத்தைக் காப்பதற்காக கடற்கரையில் அமர்ந்து சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications