வன்முறையை முடிவுக்கு கொண்டு வரஇலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன்:இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில்,
அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இலங்கை சென்று அங்கு அரசு நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினார். அப்போது வன்முறைக்கு விரைவில் முடிவு கட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து, சம உரிமைகளுடன் அமைதியான சூழலில் வாழ வழி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தினார்.
இலங்கையில் அமைதி நிலவச் செய்ய முயற்சித்து வரும் இலங்கை அரசு, நார்வே அமைதிக் குழுவுடன் இணைந்து அமெரிக்காவும் அமைதி ஏற்பட முயற்சிக்கும் என்றார் கேஸி.
-
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications