வன்முறையை முடிவுக்கு கொண்டு வரஇலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில்,

அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இலங்கை சென்று அங்கு அரசு நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினார். அப்போது வன்முறைக்கு விரைவில் முடிவு கட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து, சம உரிமைகளுடன் அமைதியான சூழலில் வாழ வழி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தினார்.

இலங்கையில் அமைதி நிலவச் செய்ய முயற்சித்து வரும் இலங்கை அரசு, நார்வே அமைதிக் குழுவுடன் இணைந்து அமெரிக்காவும் அமைதி ஏற்பட முயற்சிக்கும் என்றார் கேஸி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+