டிராவிட், டோணிக்கு நக்சலைட்டுகள் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியைக் கொலை செய்ய நக்சலைட்டுகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
![]() |
சட்டீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா என்ற பகுதியில் போலீஸார் நக்சலைட்டுகள் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த வேட்டையின்போது போலீஸாருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
![]() |
அந்தக் கடிதத்தில் டிராவிட் மற்றும் டோணியைக் கொலை செய்ய தற்கொலைப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேலும், நாட்டில் பலர் ஏழைகளாக வாழ்ந்து கொண்டுள்ள நிலையில் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் செல்வந்தர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.
எனவே அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிராவிட், டோணி தவிர கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார், செயலாளர் நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா ஆகியோரையும் கொல்ல நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டிராவிட் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications