ராஜ்யசபா தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா:செல்வராஜ் திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக ராஜ்யசபா தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த சட்டசபை செயலாளர் செல்வராஜ் திடீரென மாற்றப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ராஜ்யசபா தேர்தல் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இதை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் செல்வராஜை நியமிக்கக் கூடாது என்று அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கோரி வந்தன.
ஆனால் அதை நிராகரித்த தேர்தல் ஆணையம் செல்வராஜையே தேர்தல் அதிகாரியாக நியமித்தது. இந்த நிலையில் செல்வராஜுக்குப் பதில் நரேஷ்குப்தாவை தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
உதவி தேர்தல் அதிகாரியாக ஜமாலுதீன் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராஜ் மாற்றப்பட்டு நரேஷ் குப்தா நியமிக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications