கணவரின் காதல்.. திருமணத்தன்றேதாலியைக் கழற்றி வீசிய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கல்யாணம் செய்து கொண்ட பின்னர் தனது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அந்தப் பெண்ணை அவர் கர்ப்பிணியாக்கியதும் தெரிய வந்ததால் தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்றார் சென்னைப் பெண்.

சென்னை அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலி வேலை பார்த்து வந்த அவருக்கும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கனகவல்லி என்ற பெண்ணுக்கும், நேற்று காலை திருநீர்மலை கோவிலில் கல்யாணம் நடந்தது.

கல்யாணம் ஆன சில நிமிடங்களில் லட்சுமி என்ற பெண் போலீஸ் புடை சூழ அங்கு வந்தார். இதனால் கல்யாண சந்தோஷத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

Srinivasan with Kanakavalli

போலீஸாருடன் வந்த லட்சுமி, சீனிவாசன் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணமாகி விட்டது. இவரது கணவர் பெயர் ராஜு. இவர் சீட்டுக்குப் பணம் பிடித்து மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் லட்சுமி தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கல்யாணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி லட்சுமியை சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்துள்ளார் சீனிவாசன். இதில் லட்சுமி கர்ப்பமாகி விட்டார்.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்திற்கு அவர் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சீனிவாசனுக்கும், கனகவல்லிக்கும் கல்யாணம் நிச்சயமானது லட்சுமிக்குத் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர் அங்கு புகார் கொடுத்தார். போலீஸார் லட்சுமியை அழைத்துக் கொண்டு திருநீர்மலை வந்தனர். ஆனால் அதற்குள் சீனிவாசன், கனகவல்லி கல்யாணம் முடிந்து விட்டது.

Srinivasan with Lakshmi

பெண் வீட்டார், சீனிவாசன் குடும்பத்தார், லட்சுமியுடன் காவல் நிலையத்தில் போலீஸார் பஞ்சாயத்து கூட்டினர். சீனிவாசன் என்னை எனது வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நான் வேலைக்குப் போய் சாப்பாட்டு போட்டு வந்தேன். என்னுடன் அவர் பலமுறை உடலுறவு கொண்டார். கணவன், மனைவியாகத்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றார் லட்சுமி.

சீனிவாசனோ, நான் பழகியது உண்மை. ஆனால் அவருடன் உறவெல்லாம் வைத்துக் கொண்டதில்லை. வேறு சிலருடன் அவருக்கு உறவு உள்ளது. அதில்தான் அவர் கர்ப்பமாகியுள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட போலீஸார் உனது கணவர் திரும்பி வந்தால் என்ன செய்வாய் என்று லட்சுமியிடம் கேட்டபோது,

அவர் எங்கு இனி வரப் போகிறார். நான் சீனிவாசனுடன்தான் வாழ்வேன் என்றார். இந்த சமயத்தில், தான் லட்சுமியிடம் பழகியதையும், உறவு வைத்துக் கொண்டதையும் ஒத்துக் கொண்டார் சீனிவாசன்.

இந்த வாதப் பிரதிவாதங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லி, இதற்கு மேலும் சீனிவாசனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து அதை போலீஸாரிடம் தெரிவித்தார்.

தாலியைக் கழற்றி போலீஸாரிடம் கொடுத்த கனகவல்லி, ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு என்னைக் கல்யாணம செய்து கொண்ட இவருடன் வாழ முடியாது, அவர் எப்படியும் போகட்டும், என்னை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டு தனது உறவினர்களுடன் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து சீனிவாசனிடம் திரும்பிய போலீஸார் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டனர். அதற்கு சீனிவாசன், லட்சுமியுடன் குடும்பம் நடத்துவதாக கூறினார். இதையடுத்து அதை ஒழுங்காக செய் என்று சீனிவாசனை அட்வைஸ் கலந்த எச்சரிக்கையுடன் அங்கிருந்து லட்சுமியுடன் அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+