மதுரை மேற்கு தொகுதி-15 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்லையொட்டி அத்தொகுதியில் பணியாற்றி வந்த 15 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த எஸ்.வி சண்முகம் கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தார்.
அதிமுக சார்பில் தேர்வான இவர் திமுக ஆதரவாளராக மாறிய நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து இத் தொகுதிக்கு வரும் ஜூன் மாதம் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் பணியாற்றி வந்த 15 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இன்ஸ்பெக்டர் உதயசூரியன், சுப்புராமன், புருஷோத்தமன் ஆகியோர் ஏற்கனவே மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவினருக்கு சாதகமாக நடந்ததாக புகார்களுக்கு ஆளாகி இடம் மாற்றப்பட்டனர்.
தேர்தலுக்கு பின் அவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கே வந்தனர்.
அதேபோல இந்த முறையும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு இவர்கள் மீண்டும் தங்களது பழைய இடங்களை அடைவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications