நம்பிக்கையை காப்பாற்றுவேன்: திருச்சி சிவா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:நதிகள் இணைப்பு மற்றும் இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியம் தந்து செயல்படுவேன் என ராஜ்யசபா வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திருச்சி சிவா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
என் தலைவர் முதல்வர் கருணாநிதி, நதிகள் இணைப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார். இதற்காக நடவடிக்கை எடுப்பது எனது முதல் கடமையாக இருக்கும்.
முதல்வர் கருணாநிதி, என் அதிக நம்பிக்கை வைத்து என்னை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்துள்ளார். அவர் நம்பிக்கையும், மக்கள் நம்பிக்கையும் காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என்றார்.
இவர் கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி முதல் 2002ம் ஆண்டு ஏப்ரல் வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஸ்டாலின் தீவிர ஆதரவாளர் ஆவார்.












Click it and Unblock the Notifications