For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ்-4543 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஆரம்பித்த 2ம் நிலை காவலர் தேர்வில் 4,543 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று சென்னை உள்பட 15 மையங்களில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் 4,543 பணியிடங்களுக்கு, 1 லட்சத்து 98,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1 லட்சத்து 78,000 விண்ணப்பங்கள் தகுதியான மனுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட தினமும் 1,500 பேர் வரவழைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன் 20ம் தேதி வரை இத்தேர்வு நடக்கவுள்ளது.

சென்னையில் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தேர்வு பணி நடக்கிறது. இதில் 1,500 பட்டதாரிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 20ம் தேதி பெண்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X