மகளுக்கு மகுடம்-கருணாநிதி மீது தம்பிதுரை தாக்கு
ஒசூர்: தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல், தன் மகளுக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என முன்னாள் அமைச்சரும் பர்கூர் தொகுதி எம்எல்ஏவுமான தம்பிதுரை கூறியுள்ளார்.
ஒசூரில் அதிமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச திருமணமும், நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் எதிர்கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வமும், முன்னாள் கல்வி அமைச்சரும், பர்கூர் தொகுதி எம்எல்ஏவுமான தம்பிதுரை கலந்து கொண்டனர்.
தம்பித்துரை பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி, ஏழை மக்களை பற்றி கவலைப்படாமல் தன் மகள் கனிமொழிக்கு எம்பி பதவியை அளித்து மற்றொரு அரசியல் வாரிசை உருவாக்குகிறார்.
திமுக ஆட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும், முடிவுகளை விரைவில் எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா எனவும், கட்சியை கட்டுக் கோப்பாக நடத்துபவர் ஜெயலலிதா எனவும் லயோலயா கல்லூரி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
வீட்டை கட்டி பார் என பெரியவர்கள் கூறினர். ஆனால் திமுக ஆட்சியில் சிமெண்ட, இரும்பு, கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எவ்வாறு வீட்டை கட்டுவது என்றார்.
பின்னர் பேசிய பன்னீர்செல்வம்,
அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில், பல முறைகேடுகள் நடத்தி திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும், அப்போது அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications