திருவள்ளூர்-புதிய விமான நிலையத்திற்கு மக்கள்எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர்: புதிய விமான நிலையத்திற்காக தங்களது நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய 820 ஏக்கள் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுடைய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் இத்திட்டத்தை திரும்ப பெறவேண்டும் என கோஷமிட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் ரன்வீர் பிரசாத் கூறுகையில்,
கடம்பத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த திருமணிகுப்பம், வயலூர், திருப்பாதியூர் ஆகிய பகுதிகள் இந்த விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படுகின்றன.
இங்கிருக்கும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications