அண்ணாவின் இயக்கம் ஒரு குடும்ப சொத்தா? வைகோ
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:அண்ணா தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்தின் சொத்தாக கூடாது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மதிமுக கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
அண்ணா தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்து சொத்தாகக் கூடாது. பெரிய பொறுப்பிலுள்ளவர்கள் அடுத்தவர்களின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். பத்திரிக்கைகளின் பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்வதோடு, அவர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் வன்முறை கும்பலால் சூறையாடப்பட்டபோது, அங்கு நின்றிருந்த போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஏன் என தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications