For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி: பாய்லர் வெடித்து 18 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:திருச்சி அருகே உள்ள தனியார் என்ஜீனியரிங் நிறுவனத்தில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

திருச்சி அருகே உள்ள மாத்தூர் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான என்ஜீனியரிங் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று திடீரென பாய்லர் ஒன்று வெடித்துச் சிதறியது.

அதிக வெப்பம் காரணமாக பாய்லர் வெடித்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் அப்பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 18 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரிசா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X