For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரியை வாட்ச் பண்ண வேண்டும்: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மு.க.அழகிரியின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ பாஜக பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கனிமொழிக்கும், அழகிரிக்கும் அரசியல் ஆர்வம் இல்லை என்றார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இப்போது கனிமொழியை எம்.பி தேர்தலில் நிறுத்தியுள்ளார். இதனால் முதல்வரின் மீதான பேச்சில் நம்பகத்தன்மை குறைந்து விட்டது.

மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் எனில் மு.க.அழகிரியின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்.

அமைச்சர்களின் நடவடிக்ககளை தேர்தல் ஆணையம் கவனிப்பது போல அழகிரியின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

தரமான ஹெல்மட்டுகளையே அணிய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மட்டுகளை அணியக் கூடாது என்று போலீஸார் எச்சரிக்கின்றனர்.

ஆனார் தரமற்ற ஹெல்மட் விற்பனையைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்றார் தமிழிசை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X