சோதனை புரளி: ஜெ. வீட்டின் முன் தொண்டர்கள் கூட்டம்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாவில் போலீஸ் சோதனை நடக்கவிருப்பதாக நேற்றிரவு தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு விடிய விடிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஜெயலலிதா நேற்றிரவு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அவருடைய போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாக்களில் அதிகாலையில் சோதனை நடக்க இருப்பதாக தகவல் பரவியது.
இதையடுத்து தென் சென்னை மாவட்டச் செயலாளர் கலைராஜன் அதிமுகவினரை திரட்டிக் கொண்டு போயஸ் கார்டன் வந்தார். தகவல் அறிந்த பல தொண்டர்களும் திரண்டு வந்தனர். மகளிர் அணியை சேர்ந்தவர்களும் குவிந்துவிட்டனர்.
இரவு முழுவதும் பங்களாவின் முன் தூங்காமல் கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். நடுரோட்டிலிலேயே அமர்ந்திருந்தனர். இதனால் கதீட்ரல் சாலையிலும் போயஸ் கார்டன் செல்லும் சாலையிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் பங்களாவிற்கு முன் போலீஸார் வரவில்லை.
இன்று காலையில் இந்த தகவல் அறிந்து மேலும் தொண்டர்கள் கூட்டம் கூடியது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், கழக நிர்வாகிகள் ஜெயகுமார், சுலோசனா சம்பத், வழக்கறிஞர் ஜோதி எம்எல்ஏ சேகர் பாபு உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் திரண்டனர்.
இதே போல் சிறுதாவூர் பங்களா முன்பும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடினர். காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் தொண்டர்கள் அங்கு திரண்டனர்.
ஆனால் இரு இடங்களிலும் எந்தச் சோதனையும் நடக்கவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications