4 கட்டங்களாக கூட்டுறவுத் தேர்தல்
சென்னை:கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது
முதல் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் நான்கு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்தல் அறிவிப்பு ஜூன் 12ம் தேதியும், 2வது நிலை தேர்தல் அறிவிப்பு 13ம் தேதியும், மூன்றாம் நிலை அறிவிப்பு 14ம் தேதியும், நான்காவது நிலை அறிவிப்பு 15ம் தேதியும் வெளியிட வேண்டும்.
ஜூலை 2ம் தேதி முதல் நிலை வேட்பு மனு தாக்கலும், ஜூலை 5ம் தேதி 2வது நிலை வேட்பு மனு தாக்கலும், ஜூலை 9ம் தேதி 3ம் நிலை மனு தாக்கலும், ஜூலை 13ம் தேதி 4வது நிலை மனு தாக்கலும் நடைபெறும்.
முதல் நிலை தேர்தல் ஜூலை 7ம் தேதியும், 2வது நிலை தேர்தல் ஜூலை 11ம் தேதியும், 3வது நிலை தேர்தல் 15ம் தேதியும், 4வது நிலை தேர்தல் ஜூலை 18ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு விற்பனை சங்கம், மத்திய கூட்டுறவு சங்கம், தலைமை சங்கங்கள், கூட்டுறவு ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.