மதுரை மேற்கு:வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது
மதுரைமதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் இன்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.
மதுரை மேற்கு தொகுதிக்கு வருகிற 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது.
தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் செல்லூர் ராஜுவும், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனும், பாஜக வேட்பாளர் சீத்தாராமனும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
இதையடுத்து நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 11ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகி நேற்று மதுரை வந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், காவல்துறை ஆணையர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சில வாக்குச் சாவடி மையங்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.