வயல் பாதை தகராறில் விவசாயி சுட்டுக் கொலை
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வயலுக்குச் செல்லும் பாதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார்.
செங்கம் அருகே உள்ள கல்லாத்தூர் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது தங்கை சாரதா.
சாரதாவுக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகத்தான் ராமன் என்ற விவசாயின் நிலத்திற்குச் செல்ல முடியும். இதுதொடர்பாக ராமனுக்கும், சாரதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் ராமன் நிலத்திற்குச் செல்லும் பாதைய முட்களைப் போட்டு மறித்தார் சாரதாவின் சகோதரர் ஏழுமலை. இதனால் ராமன் கோபமடைந்தார்.
தனது நண்பர் அருளிடம் இதுகுறித்துக் கூறினார். இதையடுத்து அருள் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஏழுமலை வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் தனது துப்பாக்கியால் ஏழுமலையை சுட்டுள்ளார்.
இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஏழுமலை உடலை மீட்டனர். அருள் மற்றும் ராமனை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications