மதுரை- புதிய கலெக்டர், கமிஷ்னர் பொறுப்பேற்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:தேர்தல் கமிஷனின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக சுந்தரமூர்த்தி இன்று பதவியேற்றார். அதே போல போலீஸ் கமிஷ்னராக தென் மண்டல ஐஜி சஞ்சீப் குமாரும் சட்டம் ஒழுங்குப் பிரிவின் துணை கமிஷ்னராக திண்டுக்கல் எஸ்.பி பாரியும் பொறுப்பேற்றனர்.

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை அமைதியாக நடத்த அங்குள்ள பாரபட்சமான (திமுக ஆதரவு) அதிகாரிகளை தூக்கி அடித்தது தேர்தல் ஆணையம்.

ஆட்சித் தலைவர் ஜவஹர், மாநகர காவல்துறை ஆணையர் சுப்பிரமணியம், தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) நாராயணசாமி, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ராமராஜன், தல்லாகுளம் உதவி ஆணையர் ராஜேந்திரன், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க ஒவ்வொரு பதவிக்கும் 3 பேரை பரிந்துரை செய்யும்படியும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்தப் பதவிகளுக்கு தலா 3 பேர்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசு வழங்கியது.

அந்தப் பட்டியலில் இருந்து சஞ்சீவ் குமாரை கமிஷ்னராகவும், பாரியை சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னராகவும் ஆணையம் நியமித்துள்ளது. இருவரும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

அதே போல நாமக்கல் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்தி இன்று மதுரை கலெக்டராக பொறுப்பேற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+