தூங்கிய டிரைவர்- அரசு பஸ் மரத்தில் மோதி 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மத்தூர்:கிருஷ்ணகிரி அருகே மத்தூரில் அரசு பேருந்து மரத்தின் மீது மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்துக் கொண்டிருந்த போது டிரைவர் தூங்கிவிட்டார்.

இதில் நிலைதடுமாறிய பேருந்து சாலை ஓரத்திலிருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த மரமே சாய்ந்துவிட்டது.

பேருந்தின் முன்பகுதியில் நொறுங்கியது. அங்கு அமர்ந்திருந்த டிரைவர் உள்பட 3 பயணிகள் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+