மழை வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா 37 பேர் பலி-3 லட்சம் பேர் பாதிப்பு
ஹைதராபாத்: ஆந்திராவில் பெய்து வரும் கன மழையில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
வங்க கடலில் உருவாகியிருந்த புயல், சமீபத்தில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து அங்கு கடந்த 3 நாட்களாக கன மழையும், பலத்த சூறைக் காற்றும் வீசி வருகிறது.
இதனால் ஆந்திரின் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிக வீடுகள், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
222 கிராமங்கள், 49 தாலுகாக்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. 9700 வீடுகள் சேதமடைந்துள்ளன. 8537 கால்நடைகளும் இறந்துள்ளன. பல்வேறு ஏரிகளும் உடைப்பெடுத்துள்ளன. அவற்றை சரி செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications