விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சர்வதேச முனையப் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் அது வெடிக்கும் என்று கூறியுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தரப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் போலீஸார் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி எனத் தெரிய வந்தது. இந்த புரளியைக் கிளப்பியது யார் என்பது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த புரளியால் விமான சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications