மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரத்து அதிகரிப்பு:சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தம்
மேட்டூர்: கர்நாடகவிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு அதிகரித்ததையடுத்து மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் உயர்ந்துள்ளது
கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9,014 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் 2 வாரங்களில் அணை திறக்கப்படும்.
கர்நாடகத்தில் இருந்து காவிரி தமிழகத்தில் நுழையும் ஒனேக்கல் பகுதியில் அருவில் நீர் கொட்டி வருகிறது.
நீர் ெகாட்டுவது மிக அதிகமாக உள்ளதால் ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீராணம்-சென்னைக்கு குடிநீர் நிறுத்தம்:
இதற்கிடையில் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போய்விட்டதால் ஏரி வற்றி வருகிறது.
இதனால் குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூரிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது.