கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு:தமிழகம் முழுவதும் முஸ்லீம்கள் போராட்டம்
சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த முஸ்லீம்கள் இன்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் தலைவர் ஜைனூலாப்தீன் தலைமை தாங்கினார்.
ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்திய அனைவரும் பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல நெல்லையில் வண்ணாரப்பேட்டை பகுதியிலும் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தது.
போராட்டம் குறித்து ஜைனுலாப்தீன் கூறுகையில், நீண்ட நாளாக நிலுவையிலுள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு இருந்தது. ஆனால் சில அரசியல் தலையீடுகள் காரணமாக அந்த உரிமை பறிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2 சதவீதம் மட்டுமே முஸ்லீம்களுக்கு வழங்கப்படுகிறது. இது போதாது. எனவே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் கருணாநிதியும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த போது, சட்டத்தில் ஏற்கனவே இதற்கான வழிவகைகள் உள்ளன என்று கூறியுள்ளார். எனவே முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க இதுவே தகுந்த நேரம் என்றார் அவர்.
சேலம், கோயமுத்தூர், திருச்சி, மதுரை, கடலூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications