ரயில்வே சிக்னல் பாக்ஸ்களை திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சிக்னல் பெட்டிகளை திருடிய 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சிக்னல் பாக்ஸ்கள் அடிக்கடி திருடுபோயின. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தனிப் படை அமைத்து இந்த கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தப் படையிடம் ஆனந்த் (28) என்பவர் சிக்கினார். சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்த இவர் கடந்த 3 மாதங்களில் 11 இடங்களில் சிக்னல் பெட்டிகளை உடைத்து அதிலுள்ள தாமிர வயர்களை திருடி விற்றுள்ளார்.
இதை விலைக்கு வாங்கிய பழைய இரும்புக் கடை வியாபாரி மணிகண்டன்(22) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிக்னல் பெட்டிகள் அடிக்கடி திருடு போனதாலும் உடைக்கப்பட்டதாலும் திருநெல்வேலிக்கு வந்து செல்லும் ரயில்கள் பலமுறை சிக்னல் கிடைக்காமல் நடு வழியில் நிறுத்தப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications